1-செப்டம்பர்-2015 கீச்சுகள்




ஆந்திராவில் இறந்த 20 தமிழர்களில் தங்கள் சாதிப் பிணங்கள் 6 க்கு மட்டும் போஸ்ட் மார்ட்டம் விண்ணப்பித்தது பாமக .இதுல மாற்றம் முன்னேற்றமாம்
   
பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் ஏழைக்கு மூன்று ரூபாய் வரி... ஐந்நூறு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பணக்காரனுக்கு எக்ஸ்ட்ரா டாக் டைம்...
   
வெளியே இருந்தால் ஓடும் ரயிலை ரசிக்கிறார்கள். ரயிலுக்குள்ளே இருந்தால் வெளியே இருப்பதை ரசிக்கிறார்கள். குழந்தைகள்தான் எவ்வளவு வாழ்கிறார்கள்!
   
உண்மையான அன்பு விரும்பினாலும் உடனிருக்கும்! வெறுத்தாலும் உடனிருக்கும்!
   
காதல் என்றேன் அடி வேணுமா என்றாள் காலம் முழுதும் கிடைக்குமா என்றேன் நான் :-)) #காதல்
   
பழைய சாதத்தில் தொடங்கி. பழைய கீ பேர்டு தேய்ந்த செல்போன் வரை அம்மாக்களே மிச்சமானதை வைத்துக்கொள்கிறார்கள்.. #Amma 😍
   
காதல் கொண்டேன், 7ஜி இந்த இரண்டு படம் போதும், யுவன் தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத இசையமைப்பாளன் என்பதை நிரூபிப்பதற்கு.. #HBDYuvan
   
கர்த்தர் உங்களை விட்டு விலகுவதும் இல்லை உங்களை வாழ விடுவதும் இல்லை - சைத்தான் 14:5
   
ராஜா, ஜெயம் ரவிட்ட இப்டித்தான் கேட்டிருப்பார்; "அரவிந்த்சாமியை வெச்சு ஒரு படம் பண்ணலாம்னிருக்கேன். உனக்கும் ஒரு ரோல் இருக்கு. பண்றியா?"
   
காயப்படுத்தியபின் கேட்கப்படும் மன்னிப்புகள் ஒருபோதும் அக்காயங்களை சரிசெய்வதில்லை
   
அம்மாவைப்போல மணக்கும்படி சிலரால் சமைத்துவிட முடியும். ஆனால் அம்மாவை மறக்க வைக்கும்படி யாராலும் சமைக்க முடியாது.. அம்மாதான் best 😍😍
   
👉அடுத்தவங்க தங்களோட கவலைய நம்மகிட்ட மறைக்கிறாங்கன்னா அவங்க நம்மல விட்டு ரொம்ப தூரம் போயிட்டு இருக்காங்கன்னு அர்த்தம்.!👍
   
வாழ்க்கைல குடிக்காத ஆண்கள் கிடைச்ச பெண்கள் பாக்கியசாலிகள்..!!! அதே போல படிக்காத பெண்கள் கிடைச்ச ஆண்கள் பாக்கியசாலிகள்...!!!
   
நெருங்கியிருந்து வேதனை தருவதைவிட , விலகி நின்று மகிழ்விப்பது மேல்
   
நாட்ல கிட்னி ஃபெயிலியரானவன், லிவர் பெயிலியரானவன் கூட சந்தோஷமா இருக்கான், இந்த லவ் ஃபெயிலியராவனுங்க போடுற சீரியல் இருக்கே, அப்பப்பா
   
உனக்கென்ன வேண்டும் சொல்லு🎼🎼 . . . . . . . . . . . . . . . . . . . . குழந்தை:நீங்க வீட்டுக்கு வாங்கப்பா😭 (வெளிநாட்டில் வேலை பார்க்கும் அப்பா)
   
ஆற்றில் நீந்திச் செல்லும் மீனைப் பிடித்து கண்ணாடி குடுவையில் அடைத்து அழகு பார்ப்பதற்கு பெயர்தான் இக்கால மனிதாபிமானம்
   
60 வயதிற்கு மேல் 6 வயதுக்குக் கீழ் இருப்பவர்களிடம் 5 நிமிடங்களேனும் நம்மால் நேரம் ஒதுக்கி பேசமுடிகிறது என்றால் நாம் சிறப்பாக வாழ்கிறோம்.
   
நீ மாறிட்ட.. நீ முன்ன மாதிரி இல்ல.. இப்படி சொல்றாங்கனா அந்த மாற்றம் தானா வந்துருக்காது.. இத சொல்றவங்கதான் இதற்கு முதல் காரணமா இருப்பாங்க
   
ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
   

0 comments:

Post a Comment