23-டிசம்பர்-2014 கீச்சுகள்




நான் விஜய் ரசிகன் தான் இருந்தாலும் அஜித்தோட பில்லா படத்துல Gun அப்புடி ஸ்டைலா புடுச்சு சுடறமாறி ஒரு சீன் சான்ஸே இல்ல நயன்தாரா நயன்தாரா தான்
   
என்னோட ஆர்ட்டிகிள் ஒன்னு தமிழ் ஹிந்து பேப்பர்ல வந்திருக்குங்கோஓஓஓ...(ஆல் எடிசன் 20/12/14) http://pbs.twimg.com/media/B5b0K-wCUAAfIyl.jpg
   
சார், என் படம் ஃபிளாப் ஆகிடுச்சு.அதை மறைக்க என்ன செய்யனும்? 6 மாசம் கழிச்சு பிளாக் பஸ்டர்னு ஒரு டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணுங்க
   
ஏ நெகடிவ் ரத்தம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் ஹாஸ்பிடலில் என் நெருங்கிய உறவினருக்கு நாளை 23/12/14 காலை தேவை. நண்பர்கள் rt செய்து உதவவும்.
   
பொங்கல்-ல்ல மிளகு எதுக்கு போடறாங்க-ன்னு கண்டுபுடிச்சிட்டேன்... சாப்பிடும் போதே தூங்கிடக் கூடாது-ல்ல அதான்...
   
ஒரு விசய் ரசிகன் சிவாஜி எந்திரனுக்கு அப்புறம் ஐ தான் இருக்கப்போவுதுன்னு சொல்றான் !அவனே நண்பன்னு ஷங்கர் ஒரு படம் எடுத்தத மறந்துட்டான்
   
புடவை எந்தப் பெண்ணையும் அழகாக்கி விடும் ஆனால் புடவையையே அழகாக்க சில பெண்களால் மட்டுமே முடியும்!
   
தகப்பன் இழந்த பெண் தன்னை உலகிலேயே அதிமுக்கியமாகக் கொண்டாடும் ஒரே ஆணை இழக்கிறாள்!
   
மனசாட்சி என்பது தவறு செய்கையில் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் கூப்பாடு போட்டுக் கொண்டேயிருப்பது!
   
ஒரே மாதிரி உலகத்துல ஏழு பேர் இருப்பாங்களாம்,நம்ம நிலமையே மோசமயிருக்கு,மிச்ச ஆறு பேரு எந்த நாட்ல எந்த தெருவுல பிச்சை எடுத்துட்டு இருக்காங்களோ
   
ஏ நெகட்டிவ் ரத்தம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் ஹாஸ்பிடலில் என் நெருங்கிய உறவினருக்கு 23/12/14 காலை தேவை. தொடர்புக்கு 8056881222
   
ஐயப்ப பக்தர்கள்: 2010: பீடி குடித்தால் தப்பில்லை. 2014: ஹான்ஸ் போட்டால் தப்பில்லை. 2016: பீர் சாப்பிடலாம். 2018: கட்டிங் மட்டும் போடலாம்!
   
"பறவைகளும் குருவிகளும் கூடு திரும்பத் தடையில்லை நாங்க மட்டும் வீடு திரும்ப வழியில்லை!" (இலங்கைத் தமிழர் பற்றி) -இரா.மோகன்ராஜன்(ஒற்றைச்சிறகு)
   
திடீர்னு நாய் ரோட்டை கிராஸ் பண்ணச்சு. எப்படி மின்னல் வேகத்துல ஓடுது பாருனு டிரைவர் சொன்னாரு.. எனக்கு வேற ஒண்ணு ஞாபகம் வந்து சிரிச்சிட்டேன்
   
ஜில்லா ப்ளாக்பஸ்டர் தான் ஆனா பாவம் மோகன்லால கௌரவம் கௌரவம்ன்னு கூட்டிட்டு வந்து அசிங்கப்படுத்திட்டாங்க ;-)
   
தெரியாததை செய்யாதே ! தெரிந்ததை செய்யாமல் இருக்காதே ! பிறருக்கு நல்லவை செய் ! கெட்டதை அறவே தவிர் ! -காலையில் அம்மா.. http://pbs.twimg.com/media/B5atkLICQAA_lzE.jpg
   
நாம் கஷ்ட்டப்படும் போது உதவ முன்வராத எந்த உறவாக இருந்தாலும்! பின்னாளில் இஷ்ட்டப்பட்டு உதவினாலும் மனம் ஏற்றுக்கொள்வதில்லை!!
   
யாருக்கும் எப்போதும் மரணம் வரலாம்ங்கிற நிலையிலும், தினமும் சிரிப்பதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துவிடும் மனிதனை விடவா கடவுள் பெரியவன்?!
   
பறக்கும் திறனில்லாத பறவைகளை கூண்டில் அடைப்பதில்லை
   
மியூஸிக்கல் சேர் மாதிரி நயன் தாராவை நடுவால உக்கார வெச்சு சிம்பு ,பிரபுதேவா,ஆர்யா,உதயநிதி 4 பேரும் சுத்தி வர்ற மாதிரி கனா கண்டேன்
   

0 comments:

Post a Comment