9-மே-2014 கீச்சுகள்




இறவா வரம் கேட்ட யாரோ ஒரு அரக்கன் தான் பிளாஸ்டிக்கா பிறந்திருக்கனும்!
   
அம்மாக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு - கவலைப்படுவது !!
   
விஜய்யும், Csk வும் ஒன்னு தான் தோல்விகள் வெகு சில மட்டுமே ஆனால் அந்த தோல்விக்காக எதிரிகள் ஏங்குவார்கள் தோற்றதும் அதிக விமர்சிக்க படுவார்கள்
   
மழைநீர் சேமிப்பு ! இதை பிரிண்ட்அவுட் எடுத்து கிராமபுற மக்களுக்கு தரலாமே! http://t.co/sEvEzEnjh0
   
செத்துட்டான்னு நெனச்ச சொந்தக்காரன் நாளைக்கு போன் பண்ணுவான் பாருங்க,என் பொண்ணு 1130மார்க்,உன் பையன் எவ்ளோனு #மீள்
   
யார் புன்னகையை திருப்பி அளிக்க முடியாவிட்டாலும் குழந்தைகளின் புன்னகையைப் புறக்கணிக்காதீர்கள் ... பாவம் உலகம் சுகமானது என நம்புகிறார்கள் ...!
   
வெகு யதார்த்தமாய் ரூபாய்த்தாளில் காணும் "ஐ லவ் யூ" எனும் வாசகம் படிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் என்றோ அவள் சொன்ன குரலில்தான் வாசிக்கிறது மனது..
   
ஒரு உறவை முறித்துக்கொள்ள பொய்களை விடவும் உண்மைகளே அதிகம் காரணமாகின்றன !
   
சென்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பு பற்றி துப்பு தெரிந்தால் 044-22502500 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம், 5லட்சம் பரிசு-காவல்துறை அறிவிப்பு.
   
ஒரு பெண் ஒரு பருவத்தில் அழகாக இருப்பாள்.பருவத்திலும் ஒரு பொழுதில். பொழுதிலும் ஒரு கணம் தான். ஆண் அக்கணத்துக்காகவே சாகிறான்
   
ஹா ஹா RT @DMariappan ஜல்லிகட்டு, கல்யாணம் 2லயும் வளர்க்குறவன் எஸ்கேப் ஆயிருவான், அடக்குறவனுக்கு தான் உசிர் போயிரும்
   
உனக்குப் பிடித்தவர்களின் தீய குணங்கள் உன் கண்ணுக்கு தெரியாது..... உனக்குப் பிடிக்காதவர்களின் நல்ல குணங்கள் உன் கண்ணுக்கு தெரியாது.....
   
கடல் நீரை குடிநீராய் மாற்ற திட்டம் போடும் அரசு , முதலில் மழை நீர் கடல் நீர் ஆவதை தடுக்க வேண்டும்
   
"கைப்பை பத்திரம் " என்று கணவர் சொல்வதற்கும் மகள் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் பணத்துக்கும் டைரிமில்க்கிற்கும் உள்ள வித்தியாசம்
   
மேக்ஸ்வெல் அடிக்கிற அடிக்கு ஆரஞ்சு கேப் இல்ல, ஆரஞ்சு யூனிஃபார்மே கொடுக்கணும்! #CSKvsKXIP
   
எந்த நடிகையுமே வீட்ல பாத்திரம் தேய்ப்பதில்லை !! ஆனாலும் அவங்க சிபாரிசு பண்ணற டிஷ்வாஷ் சோப்பை தான் வாங்கறோம் :-) #எ.மா.ச.வா.
   
RT @barathi_: இறவா வரம் கேட்ட யாரோ ஒரு அரக்கன் தான் பிளாஸ்டிக்கா பிறந்திருக்கனும்!
   
வீரத்துக்காக கொம்புகளை பிடிப்பது மிருகவதையென்றால்... பாலுக்காக மடியைப்பிடிப்பதும் மிருகவதை தானே..?
   
சின்சியாரிட்டிக்கு தமிழில் இளிச்சவாய்த்தனம் என்று அர்த்தம்
   
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி | தமிழ் -- "எள்ளல்" தேவையில்லை! உண்மையான பொருள் என்ன?= http://t.co/KctrQVQ49d
   

0 comments:

Post a Comment