10-மே-2014 கீச்சுகள்




இன்னைக்கு கடைசி பெஞ்ச் மைனர்கள் நிலைமை இப்பிடிதான் இருக்கும் :))) http://t.co/ygT2yym0OG
   
RT @Shanojzana: இந்தக் குழந்தையை காணவில்லை!!! தயவுசெய்து அனைவரும் பகிரவும் ! ஒரு தாயின் கண்ணீருக்காக ......!! http://t.co/RJCvHXsZHQ
   
பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம். அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம்.
   
கனிமொழியும் திருடல, ராஜாவும் திருடல , நான் தான் திருடினேன்னு நீதிபதி ஜெயில்க்கு போயிருவாரு பாருங்க
   
ஓடி ஓடி உழைக்கனும்..EC பண்ணி சளைக்கனும்,கிப்டு வாங்கி கொடுக்கனும்,கடைசியில் பிச்சை தான் எடுக்கனும் #காதல்
   
நான் +2ல 1100 எடுப்பேன்னு அம்மா ஆரத்தி எல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தாங்க..அப்புறம் அதையே ரசமா அன்னைக்கு வச்சிட்டாங்க!! #பபி
   
நல்ல மார்க் எடுத்தவன் எஞ்சினியரிங் படிப்பான்,குறைஞ்ச மார்க் எடுத்தவன் BBA,MBA ன்னு படிச்சிட்டு அவனுக்கே HR ஆயிடுவான்.
   
தனக்கு வர போறவளுகள உள்ளங்கைல வச்சு தாங்குற ஆசைலதான் எல்லா பசங்களும் இருக்கானுங்க, ஆனா மேரேஜ்க்கப்பறம் யான மாதிரி ஆய்ட்றதால முடியுறதில்ல.
   
ப்ளஸ் 2 ரிஸல்ட் ஒன்றுக்காக பல ஒலிம்பிக் மெடல்களை தியாகம் செய்த நாடு தான் நம் நாடு
   
படிப்பு மட்டுமே உயர்த்தியதா,தெரியாது. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் படிப்பில்லை என்றால் உயர்ந்திருக்க மாட்டோம்.education above all.
   
மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில் வருகிறார்கள். இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்
   
10வருஷம் முன்னாடி +2ல நான்தான் முதல்மார்க் எடுப்பேன்னு எங்கம்மா ஆரத்தி எல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தாங்க, அப்புறம் அதையே ரசமா வச்சிட்டாங்க!
   
அழ வைத்துவிட்டான் இந்தப் பையன் :-( இசைஞானியிடம் இந்த ஒளிக்கோப்பைச் சேர்த்துவிடுங்கள் http://t.co/B7FMfxNG5S
   
புத்தக மூட்டையைத் தூக்கி வெற்றிப்பெற்ற மாணவர்கள் அனைவரும் பொறியியல் குடோனில் அடைபடாதீர், பூந்தோட்டம் நிறைய இருக்கிறது. தேனீக்களாய் மாறுங்கள்
   
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும்! -கவியரசு கண்ணதாசன்
   
மன்மோகனுக்கு மே 17-ம் தேதி பிரிவுபசார நிகழ்ச்சி. # டிஸ்மேண்டில் யுவர்செல்ஃப் சிட்டி ...! http://t.co/vXfkAxhoGK
   
நான் படித்த பிதோகோரஸ் தியரம் எனக்கு இன்னிக்கு சாம்பார் வைக்க எந்த விதத்திலும் உதவவில்லை என்பதை இந்த தருணத்தில் உரைத்து அமர்கிறேன்
   
பெற்றோர்களே குறைந்த மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளை திட்ட வேண்டிய நேரமல்ல இது. அவர்களை சமாதானம் செய்து அடுத்த கட்டத்திற்கு தயார் செய்யுங்கள்.
   
நீ எப்பொழுது என் முன் தோன்றினாலும் நூறாயுசு தான்
   
வாழ்கைக்கு மதிப்பெண்கள் முக்கியமில்லை என்கிற உண்மை, மதிப்பெண்கள் பெறும் கட்டத்தையெல்லாம் தாண்டிய பின்னர்தான் புரிபடுகிறது!
   

0 comments:

Post a Comment