7-மார்ச்-2014 கீச்சுகள்




திமிரை நம்மள விட உயர்ந்தவன்கிட்டயும்,சிரிப்பை நமக்கு கீழ இருக்குறவன்கிட்டயும் காமிக்கனும்.முக்காவாசி பேரு உல்டாவாதான் பண்றாங்க.
   
எல்லா அன்பையும் சேகரித்து , மொத்தமாய் ஒருவன் மீது திணித்து , அவனை பைத்தியமாக மாற்றி , தானும் சைக்கோவாகிவிடுவது #பெண்கள்
   
அம்மா பாடலை இசையமைக்க அனிருத் ஒன்னும் ராஜா இல்லை ,அம்மா பாடலை பாட தனுஷ் ஒன்னும் ஜேசுதாஸ் இல்லை :-/ #vip
   
எதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களோ அதுவாகவே நான் இருக்கவிரும்புகிறேன், உங்களுக்காக நான் மாறநினைத்தால் நானே என்னை வெறுக்கதுவங்கிவிடுவேன்
   
வளைந்து கொடுப்பவன் எனத் தெரிந்துவிட்டால் அடிக்கடி வளைத்துப் பார்ப்பார்கள்... உறுதி எனத் தெரிந்தால் உரசிப் பார்க்கக் கூட தயங்குகிறார்கள்!
   
கண்ணியம் காக்கும் ஆண்களிடம் பெண்ணியம் பேசவே தோன்றாது
   
கரப்பான்பூச்சியை கண்டாலும், பாலியல் பலாத்காரம் நடந்தாலும் ஒரே மாதிரிதான் கத்துகிறார்கள் ஹீரோயின்கள்
   
வாங்கிய நல்ல பெயரைகூட எளிதில் அழித்துவிட முடிகிறது...கெட்ட பெயரை அழிக்க முடிவதில்லை
   
தமிழா! யாருக்கோ வாக்களி! காங்கிரஸை மட்டும் வேரோடு அழி!
   
எதுவாகவும் இல்லாமல் போய்விடுவேனோ என்ற பயத்திலேயே எல்லாமாக இருக்க முயற்ச்சிக்கிறேன்.... #மீள்
   
உலகஅளவில் போராளி இயக்கமாக இருந்த கம்யுனிஸ்ட் இந்திய அளவில் கோமாளி இயக்கமாகவும் தமிழ் நாட்டில் ஏமாளி இயக்கமாகவும் மாறியது மாபெரும் துரதிஷ்டம்
   
ஜெயலலிதாவின் போக்கு அவருக்கே ஒருநாள் வினையாகும். ஆகத்தான் வேண்டும். அடிப்படை மரியாதை தெரியாதவர்களால் நல்லாட்சி தரவே முடியாது.
   
ஆணோ....பெண்ணோ....ஒரு குழந்தையின் வருகை தான் தம்பதியினரின் வாழ்க்கையை எத்தனை இனிமையானதாக்குகிறது!!
   
அறிவை வளர்த்துக்கொள்ள பல வழிகள்...அதில் ஒன்று "குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் தேடுவது" !!
   
வீட்ல விசேஷம்னு சொல்லிட்டு மண்டபத்துக்கு அழைக்குறது தான் நம்ம பண்பாடு :/
   
நோட் பண்ணுங்க... நோட் பண்ணி வைங்க... 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் அலுவலகம் பொதுமக்கள் புகார் அளிக்க இலவச எண் - 18004257012
   
ஜிம் முக்குப்போய் கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் பண்ணி பைசெப்ஸ் ,சோல்டர் ஏற்றுவான் ஆண். அதில் வசதியாய் சாய்ந்து அழுவாள் பெண்
   
எந்த.சவாலையும் சந்திக்க காங்கிரஸ் தயார் -ஞானதேசிகன் #இலங்கை எல்லை வரை போய் மீன் பிடிச்சிட்டு வந்திடு பாக்கலாம் ஏன் கால் நடுங்குது
   
ஆணின் முட்டாள்த் தனத்தை புரிந்து கொள்ளும் பெண்ணும் .. பெண்ணின் குழந்தை தனத்தை ரசிக்கும் ஆணும் மிகச் சிறந்த உறவுகளாக இருக்க முடியும் ..!
   
"அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து" தாலி கட்டிய மனைவி, இப்ப "என்னைய மிதித்து, ஒன்னாம்தேதி"யை எதிர் பார்க்கிறாள்.
   

0 comments:

Post a Comment