4-நவம்பர்-2015 கீச்சுகள்




மாபெரும் ஜவுளிகடையின் வாசலில் நின்று சின்ன பையில் வைத்து துணிகளை விற்பவா்களை விடவா தன்னம்பிக்கை உடையவா்கள் இருக்க போகிறாா்கள் உலகில்
   
விஜய் - அஜித் (பின்னிருக்கும் விளம்பர அரசியல்) Read: http://tl.gd/n_1snpjq3
   
குடி குடியை கெடுக்கும்ன்னு அந்த Bottleலே சொன்னாலும் விட்டுடுறாங்க, யாராவது பாட்டுல சொன்னாரு புடிச்சு உள்ள போட்டிடுறாங்க :-/
   
கைகூடிய காதலும் கசந்துவிடக்கூடும் ஆனால் கைகூடாக் காதல் புத்தகத்தில் ஒளித்துவைத்த மயிலிறகாய் என்றும் நெஞ்சில் மறைந்து வாழ்ந்தபடியிருக்கும்
   
கோவை சரளா அம்மா, ஶ்ரீமன் மற்றும் எனது ரசிகர்கள் எனக்களித்த இன்ப அதிர்ச்சி !! https://www.facebook.com/behindwoods/videos/vb.135016083212701/948987428482225/?type=2&theater
   
அப்பிடி ன்னா பெருசா கேட்டுட்டோம் ஒரிஜினல் டிபி தானே., ரோட்ல, பஸ்ல, ட்ரெயின் ல எவன் எவனோ உங்கள பாக்குறானுங்க, இவ்ளோ, நாள் பழகுன நாங்க 😟😟😟
   
பள்ளிக்கூடம் வைத்தால் அடைமழை பெய்கிறது,விடுமுறை விட்டால் விளையாட ஏதுவாக வெயிலடிக்கிறது.. கடவுளும் கூட குழந்தைகள் பக்கம் தான் இருக்கிறார்..
   
உலகில் வற்றாத ஜுவநதி ஒன்று இருக்கிறது அதன் பெயர் விவசாயிகளின் கண்ணீர்
   
இந்த மழைக்கு ஒரு சூடான Ctrl+ C சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றான்.. காப்பி வேணும்னா நேரா கேளு நாயே. நீபெரிய இலக்கியவாதியா என்றார்கள் 😁😁😁
   
கோயில்கள் வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல! வரலாற்றையும், கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவை! காப்போம்! http://pbs.twimg.com/media/CS0pFVAUYAEwlwm.jpg
   
கண் தொியாத வியாபாாியிடம் பொருள் வாங்கும் போது பேரம் பேசி வாங்காதே அவ்வாறு செய்தால் நீயும் குருடன் தான் இதயக்குருடன்
   
சார்.உங்க படத்துக்காக.10 டைரக்டர்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ம்ம்.கண்ணுக்கு எட்டுன தூரம் வரை 1 புரொடியூசரைக்கூட காணோமே?
   
எல்லா படத்தையும் கிண்டல் பண்றீங்க, அதே உங்களுக்கு தெரிஞ்சவங்க எதுனா படத்துல வேல பாத்தா வரிஞ்சு கட்டிட்டு விளம்பரபடுத்தறீங்க 😂😂😂😂
   
சேரவே முடியாது என தெரிந்தும் பூமி சூரியனை சுற்றுவது போல தான்.. தினமும் நானும் சுற்றுகிறேன் உன்னை.. http://pbs.twimg.com/media/CS5Qc6zWoAAKLnB.jpg
   
நமக்கு பிடித்தமானவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தையை நாமும் சொல்ல ஆரம்பிப்பது, வெகு சாதரணமாக நிகழும் அழகியல்.
   
காதலால் மட்டுமே தரமுடியும்.., அழகிய கவிதைகளை இணைகின்ற போதும் அது பிரிகின்ற போதும்..#💔💔
   
வெட்கம் இல்லாமல் உன் பின்னே அலைகிறேன்.. என்றாவது நீ என்னை உச்சகட்ட வெட்கத்தோடு பார்ப்பாய் என்று…#
   
ஒரு முக்கிய அறிவிப்பு : வருகிற டிசம்பர் 20 அன்று உங்கள் கோவை காதருக்கு கோவையில் திருமணம் நடக்க இருக்கிறது..அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் ! 😁
   
நம்மை பிடிக்காமல் விலக நினைப்பவர்களை அவர்கள் விலகும் வண்ணம் நாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பது உத்தமமான காரியம்..
   
குழந்தைங்கள கூட வச்சிகிட்டு தெலுங்கு படம் பாக்கவே கூடாது ..! எப்ப எவன் ஏய் னு ஹை பிச் ல கத்துவான்னே தெரியாது.! திடுக்குனு பயந்துருதுங்க.!
   

0 comments:

Post a Comment