18-மார்ச்-2015 கீச்சுகள்




இங்கொரு அம்மா அழுவுது ,ஏன்னு கேள்றா புள்ள காணாம போச்சா?புருஷன் காணாம போச்சா? இல்லீங்க,ரெய்னாக்கு கல்யாணம்ங்க 😂 http://pbs.twimg.com/media/CASfbd_UsAEi2MN.jpg
   
அஞ்சு வயசுலே அதிகமா பேசினா சமத்துக்குட்டி ...பத்து வயசுலே பேசினா அதிகப்ரசங்கி ..20 வயசுலே பேசினா இதேல்லாம எங்கே உருப்பட போகுது ..#ஷப்பா
   
நாய் மாதிரி அலைஞ்சா அவன் ஏழை..! நாயோட அலைஞ்சா அவன் பணக்காரன்...!!
   
நல்லவர்களாக மட்டுமே வளர்க்கப் படுபவர்கள் , முட்டாள்களாகவோ, இளிச்சவாயர்களாகவோ ஆகிறார்கள் .,
   
இப்படி மக்களிடையே அமர்ந்து குறை கேட்கும் அதிகாரியா தற்கொலை செய்து கொண்டார்??? #DKRavi #NEEDJUSTICE http://pbs.twimg.com/media/CAS18jlU0AA9Vi7.jpg
   
சைரன் சத்தம் கேட்கும் போது, மனசு பதறுதுனா நீ இன்னும் மனிதனாக தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்...
   
தற்பெருமையும் தாழ்வு மனப்பான்மையும் வேண்டாம் தற்பெருமை உயரத்திலிருந்து அடிமட்டத்துக்கு கொண்டு வந்துவிடும் தாழ்வுமனப்பான்மை உயரவே விடாது.
   
கடந்த 4 வருசத்துல #விக்ரம் 23 ஆப்ரேசன் பண்ணிகிட்டாரு அத வச்சு பப்ளிசிட்டி ஏதும் அவரு தேடிகில , ஆனா நம்ம டல 😜 😜 http://pbs.twimg.com/media/CAT11mBVIAA8tf1.jpg
   
தமிழ்நாட்ல ஊழல் குற்றவாளிக்காகத்தான் கடையடைப்பு மறியல் நடக்கும்,ஆனால் Kolar மக்கள் தங்கள் நேர்மையான IAS அதிகாரிக்காக shutdown &strike today
   
என்னதான் அடுத்தவனுக்கு அறிவுரை சொன்னாலும் நீ என்ன பெரிய பருப்பானு வாழ்க்கை பளார்னு ரெண்டு அறை அறையுது பாருங்க . அதான் வாழ்க்கை .
   
பணக்காரன் பணக்காரனோடும், பிரபலம் பிரபலத்தோட மட்டும்தான் பேசுவான் என்பது இங்கு எழுதப்படாத விதி.
   
ட்விட்டர்ல மீசை வச்ச ஆம்பளைங்க எத்தனை பேர் இருக்காங்க? ஆனா இதுவரைக்கும் ஆம்பளைங்க கூட பேசியே நான் பார்த்தது இல்லையே? http://pbs.twimg.com/media/CAPoujiVAAAyFEs.jpg
   
இந்த ஜென்மத்தில் உன்னை சேரும் வாய்ப்பு எனக்கில்லை ஆனால் எந்த ஜென்மத்திலும் உன்னை தவற விடும் எண்ணம் எனக்கில்லை!!!
   
"அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே" என்று மனிதன் பொறாமைப்படாத ஒரே விஷயம் மரணம்தான். !!
   
ஆதார் அட்டை கேட்டு மக்களை தொந்தரவு செய்யவேண்டாம்: சுப்ரீம் கோர்ட் ! # அப்டியே லைசன்ஸ் கேட்டும் தொந்தரவு செய்யவேணாம்னு போலீஸ்க்கு சொல்ங்க
   
அறிவோடு திரிவதற்கு டிவிட்டர் எதற்கு, இப்டி லூசுத்தனமா பேசிட்டு இருந்தா தான கலகலன்னு இருக்கும்
   
காதலின் உச்சம் காமம் என்ற நிலையை கடந்து காமத்தின் எச்சம் தான் காதல் என்ற நிலையை அடைந்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்!
   
விபூதி பூசும் தாயின் கையை தட்டிவிடுவது நாத்திகம், மறுப்பே ஆகினும், அன்பாய் ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு.
   
சத்தம் போடாத உயிர்களை கொன்றுண்பதுதான் சைவம் #மீள்
   
இந்த புகைப்படம் நம்மிடம் சொல்வது பல... அதில் ஒன்று.. " உணவுப் பொருட்களை வீணடிக்காதீர்கள் http://pbs.twimg.com/media/CANHn5FUIAAJ_th.jpg
   

0 comments:

Post a Comment