11-மார்ச்-2015 கீச்சுகள்




காசு கொடுத்து கடவுளை பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசில கடவுள்கிட்டையே காசு வேணும்னு கேட்கிறவன் தான் மனுசன்
   
பணக்காரன் சொந்தக்காரனாகனும், ஆனா தப்பித்தவறி கூட சொந்தக்காரன் பணக்காரனாகிட கூடாது # இதான் சார் நம்ம பய புத்தி
   
"நம்பிக்கை தான் வாழ்க்கை"ன்னு தத்துவமெல்லாம் பேசுறான், பேனா கேட்டா மட்டும் மூடிய கழட்டிட்டு தான் கொடுக்குறான், நம்ம மேலஅம்புட்டு நம்பிக்கை
   
தோனி : அடுத்து யாருடா ஜிம்பாவே'யா...? இவனுங்க இப்படி தான் மாட்னா மொத்தமா மாட்டுவானுங்க... http://pbs.twimg.com/media/B_uKQ81UwAEPxE_.jpg
   
அன்பை விளக்கிக் கொண்டிருக்க அலுத்துப் போன ஏதேனுமொரு கணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.... முத்தம்
   
ஒவ்வொரு முறை புதிய நண்பர்கள் என்னிடம் கோபித்து விலகும் போதும், இதுவரை விலகிடாத ஆரம்பகால நண்பர்களின் சகிப்புதன்மை மீது மதிப்பு கூடுகிறது
   
கச்சத்தீவு பிரச்னை என்பது, மிக மிக பழைய விஷயம் -சுஷ்மா #ராமர் கோவில் அதை விட பழைய விசயம் மறந்துவிடலாம்ல
   
இன்று நாம் செய்வது நாளை இரண்டு மடங்கு நம்மை வந்து சேரும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் தவறுகள் குறையும்,நன்மை அதிகமாகும்
   
'நீ ரொம்ப ஒழுங்கா' எனக்கேட்பவர் கடந்து விடுகிறார். நமக்குதான் முன்ஜென்மத்தவறுகள் வரை ஞாபகம் வந்து தொலைக்கிறது.
   
அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா?
   
மன உளைச்சல் தாளாமல் எங்காவது போயிடலாம்னு தோணும்போது இந்த மனசும் நம்ப கூடத்தான் வரும்கற உண்மை.... ஆயாசம்
   
கமல் சாயல் இல்லாம க்ளாஸ் படமும் .. விஜய் சாயல் இல்லாம மாஸ் படமும் ரொம்ப கஷ்டம்.. !!
   
தனுஷ் அனிருத்தோட சுத்தறதுக்கு காரணமே தான் கொஞ்சம் குண்டா தெரியனும்னு நினைச்சு தான் போல :-)
   
இவன் போட்ற நியூஸ் விட நியூஸுக்கு ஏத்த மாதிரி போட்ற போட்டோ தான் செம்ம.. சோனமுத்தா போச்சா! #மங்காத்தாடா :P http://pbs.twimg.com/media/B_s8uUhUIAAtysR.jpg
   
வாழ்க்கை எவ்வளவு நிம்மதியாக இருந்தது அந்த காலத்தில் என்று தான் சொல்ல முடிகிறது. உண்மையாக அந்தந்த காலத்தில் அதை சொல்ல விடுவதில்லை வாழ்க்கை.
   
கற்பு ஆண்களுக்கும் உள்ளது என்று ஆண்கள் அறிந்தாலே போதும்..அது பெண்களை கலங்கம் இல்லாமல் காப்பாற்றும்..
   
அம்மாவோட தப்புக்கெல்லாம் குட்டிப் பிள்ளைங்க குடுக்கற தண்டணை- 'அம்மா, என்னைத் தூக்கு'
   
விஜய்க்கு நடிப்பு தெரியாதுனு சொல்ற உத்தமிகளும், யோக்கியன்களும் லவ்டுடே பாருங்கடி/டா
   
திருமணம் ஆனவர் என்பதை உணர்த்தவே தாலி என்றால் இணை இறந்ததும் அதை அறுக்க என்ன அவசியம்? அவர் மறுவாழ்வுக்குத் தகுதியானவர் என்பதை உணர்த்தத் தான்
   
எழுதியவர்களைப் பற்றிய கவலையொன்றும் கவிதைகளுக்கு கிடையாது... அவை சென்றடைய வேண்டிய ஒருவருக்காக காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன...
   

0 comments:

Post a Comment