1-அக்டோபர்-2014 கீச்சுகள்




ஊருக்கு போன அர்னால்டு வந்து அம்மா எங்கன்னு கேட்டா என்னடா பதில் சொல்வேன் பாவிகளா..!!??
   
2 வருஷம் உண்ணாவிரதம் இருந்திட்டு நேத்து தான்டா ஒழுங்கா சாப்ட ஆரம்பிச்சேன் பாவிகளா. . . http://pbs.twimg.com/media/ByxrlZNCAAIxkvH.jpg
   
பர்ஸ்ட் ஹாப்ல ஊழல்பண்ணதுக்கு கைது பண்ணசொல்லி போராடுறோம் செகண்ட் ஹாப்ல கைதுபண்ணதுக்கு ரிலீஸ் பண்ணசொல்லி போராடுறோம் சென்சேஷனல் ஸ்கிரிப்டு சார்
   
ஊழல் வழக்கு சிறை தண்டனையை எதிர்த்து சினிமாகாரர்கள் போராட்டம். திருட்டு டிவீடி வழக்கில் கைதானவர்களுக்காக பொதுமக்கள் போராட்டம் செய்யனும்
   
இன்னைக்கு ஊழலுக்கு ஆதரவா போராடும் சினிமா.நாளைக்கு ஊழலுக்கு எதிரா படம் எடுப்பானுங்க.நாமெல்லாம் வெட்கமே இல்லாமல் படம் பார்த்து கை தட்டுவோம்
   
இவ்வளவு இளகிய மனம் படைத்த அமைச்சர்கள், நாளை மக்களுக்கு ஒரு துக்கமெனில் எப்படி கதறியழுவார்கள் என எண்ணும்போது தான் நெஞ்சம் விம்மி சரிகிறது.
   
இனிமே ஊழல பத்தி சினிமாக்காரன் எவனாச்சிம் படம் எடுத்தா அவனுங்கள அவனுங்களே கண்ணாடி பாத்து துப்பிக்கலாம்!
   
தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா ?தெய்வம் எதுக்குப்பா சொத்து சேர்த்துச்சு ??-)))
   
அவங்க தொழில் பாதுகாப்புக்கு அவங்க உண்ணாவிரதம் இருக்குரப்ப என்னோட பணத்தை மிச்சப்படுத்த நான் திருட்டு விசிடி பார்ப்பதில் என்ன தப்பு.
   
இந்த மாதிரி சொம்படிக்கிற விழாவிற்கெல்லாம் வருவதில்லை என்பது தான் அஜித் மீதான மிகப்பெரிய மரியாதையே...
   
ஜெயா டிவியையும் கலைஞர் டிவியையும் மாத்தி மாத்தி பாக்கும் போது ஒரே நேரத்துல ரெண்டு நாட்டுல வாழுற மாதிரி ஒரு உணர்வு வருவது எனக்கு மட்டும்தானா?
   
ஜெ கைதால் தமிழகமே துக்கத்தில் உறைந்துள்ளது - சரத்குமார் #இதே ஊழலுக்காகதான் அம்மாவை எதிர்த்து 96-ல நாட்டாமை அரசியலுக்கு வந்தார் என்பதை..
   
திரைத்துறையினர் அம்மாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தாங்களே முன்வந்து தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாமே! செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா!
   
சிவகார்த்திகேயன் எத்தனை பேர் கூட சிரிச்சா போச்சு விளையாடிருப்பாரு ஆனா இப்ப அவரையே சிரிச்சா போச்சு ரவுண்ட் ல உட்கார வெச்சுட்டாங்க
   
என்னைய கேட்டா. .கல்யாணமே பண்ணிக்காம. .எந்த commitmentம் இல்லாம தனியா ஜாலியா காடு,மலைனு ஊர் சுத்துறதுதான் நிம்மதியான வாழ்க்கை :-)))
   
யாருக்கெல்லாம் தீபாவளி போனஸ் இல்லையோ இத RT செய்யவும் #ஒரு ஆறுதல்
   
நம்மைச்சுற்றி எத்தனை அறிவாளிகள் இருந்தாலும், சில நேரங்களில் நாம் தேர்ந்தெடுப்பது நமக்கு ஆமாம் சொல்லும் ஒருவரைத்தான்!
   
திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை
   
ஒரு காலத்துல ஆர்குட்ல ஒரு பொண்ணுகூட சாட் பண்ணிட்டு இருக்கும்போது நம்பர் கேட்டப்ப அந்த பொண்ணு நான் ஊமைன்னு சொல்லுச்சு ..!!#memories
   
எல்லோருக்குள்ளும் ஒரு மெக்கானிக் தூங்குகிறான்.தன் வண்டி பழுதானால் கூட எழுவதில்லை..எதோ ஒரு ஸ்கூட்டி பழுதானால் மட்டும் பதறியடித்து எழுகிறான்.!
   

0 comments:

Post a Comment