15-செப்டம்பர்-2014 கீச்சுகள்




நெறய வீடுகள்ல ஆண்களுக்கு மனைவியின் பெற்றோரை அனுசரிக்குற பக்குவம் வந்துடுச்சு.பெண்களுக்கு கணவரின் பெற்றோரை அனுசரிக்குற பழக்கம் போயிடுச்சு.
   
OMR ல சம்பாரிக்கிறத ECR ல செலவு பண்றாங்க !
   
மகள் மார்பிலேறி படுத்துத் தூங்குவதை பொறாமையுடன் பார்க்கும் மனைவி.நமுட்டுச் சிரிப்புடன் நான். #வேறெங்கு உள்ளது சொர்க்கம்?
   
காமத்தின் முடிவில் முத்தத்தை எதிர்ப்பார்க்கிறாள் பெண். முத்தத்தின் முடிவில் காமத்தை எதிர்ப்பார்க்கிறான் ஆண்.
   
அடுப்பில் சூடுப்பட்ட பின்பும் இருடா "அஞ்சு நிமிஷத்துல தோசை சுட்டு தரேன் "என்று கண்டுக்கொள்ளாதவாறு சமைக்கும் அம்மா தான் முதல் தெய்வம் !
   
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் -ஸ்டாலின்.#யார்கிட்ட வேண்டுறீங்க? இதெல்லாம் பகுத்தறிவுலதான் வருதா?
   
அதிகமா படிச்சவர் கிட்டையும்... அதிகமா குடிச்சவர் கிட்டையும்... அதிகமா பேசக் கூடாது... ஏன்னா அவர்கள் நம்மள பைத்தியக்காரர் ஆக்கிடுவார்கள்....
   
60வயதாகியும் செட்டிலாகாமல், டீடம்ளர் கழுவும் பெரியவர் அத்தனை பேருக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார்.வார்த்தையால் அல்ல,வாழ்க்கையால்..!!
   
காசு இல்லாத ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட சுவாரசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது !!
   
ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல ஃபீல் பன்னுவாங்க பெண்கள், ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பன்னுவாங்க ஆண்கள்..!
   
போரின் கொடுமையைச் சொல்ல - இந்த ஃபோட்டோ ஒண்ணு போதும்.! http://pbs.twimg.com/media/Bxbdjm0CMAAVUIi.jpg
   
எட்டுமணி நேரம் வேலைபாக்குற கொத்தனாருக்கு 600ரூ சம்பளம்,ஹெல்ப்புக்கு சித்தாளு,லஞ்ச்+ரெண்டு டீ ப்ரேக் வித் பிஸ்கட்..நாமதான் அவசரபட்டுடோமோ?ம்ம்
   
என் கீச்சுக்களையும் ஈகோ இல்லாமல் ஆர்டி, ஃபேவ் செய்து என்னாலும் முடியும் என நினைக்க வைத்த ஆண் நண்பர்கள் சகோதரர்களை நினைத்து பெருமையே..நன்றி..
   
ஆட்டம்னா விஜய் தான்: பிரபுதேவா # ஓட்டம்னாலும் எங்க தளபதி விஜய் தான்!! :)
   
மேனேஜர் பேசுறப்ப கோபம் வரத்தான் செய்யுது ஆனா உடனே மைண்ட் வாய்ஸ் "அப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டுருது!"
   
வெட்கம் கூச்சம் பற்றி எல்லாம் நினைப்பே இல்லாமல் நம்முடைய சந்தேகங்களை கேட்க முடியும் என்கிற இடத்தை கொடுப்பவர்கள் தான் நமக்கு சிறந்த ஆசான்கள்
   
ராஜாவே வந்து பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னாலும், மூடிட்டு போய்யா உனக்கு ம்யூசிக் பத்தி என்ன தெரியும்பாங்க போல 😂😂😂
   
செய்யும் தவறு பிடித்துவிட்டால் தவறு என்று உணர்ந்த பின்பும் பின்விளைவுகள் புரிந்த பின்பும் அதைத் தொடர காரணங்களைத் தேடியலைகிறது மனம்!
   
நானா காட்டுறது வேற... அதுக்கு அமவுண்ட் தரானுக... நீயா எடுத்துப்போடுறது அராஜகம்! # பெண்ணுரிமை ஓங்குக!
   
பாவிகளை ரட்சித்து விடுகிறான் ஆண்டவன். புண்யாவான்கள்தான் போராடி சாகிறார்கள்
   

0 comments:

Post a Comment