9-ஆகஸ்ட்-2014 கீச்சுகள்




விஜய் அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்-சீமான் # 750 ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியா,இந்த ஒரு எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது?
   
கத்தி திரைப்படம் வெளிவரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம்- விஜய் ரசிகர்கள் #இத விட்டா நமக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது..
   
இலங்கையின் லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தமிட தன் முந்தைய படத்தில் ராஜபக்சே வேடமணிந்த காட்சியில் நம்ம விஜய்னா http://pbs.twimg.com/media/BugGF0mCAAAs0pI.jpg
   
எதிர்காலத்தை பற்றிய எந்த பயமும் எனக்கில்லை , ஏனெனில் எப்படியும் அதை நிகழ்காலத்தில் தான் சந்திக்க போகிறேன்....
   
ஒரு மனைவி கணவனுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை முதலில் செத்துப்போவதுதான்...
   
மனைவிடா... பொண்டாட்டீடா... சம்சாரம்டா... http://pbs.twimg.com/media/BufJSIaCUAAabzN.jpg
   
இனி நமக்குள் ஏதுமில்லை என்று சொன்ன பிறகு என்னை நானே வீடுவரை கூட்டிசென்ற வலி - தெரியுமா உனக்கு
   
அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா? அம்மா: விமலா டா... பையன்: அப்பா எதுக்காக "டார்லிங்"னு கூப்புடுறார்....
   
உச்சபட்ச அன்பு என்பது ஒருவரைக் குழந்தையாகப் பாவித்தல்; உச்சபட்ச மரியாதை என்பது ஒருவரைத் தாயாய்ப் பாவித்தல்.
   
எது நடந்ததோ அது கேவலமாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் கேவலமாகவே நடக்கிறது, எது நடக்கப்போகிறதோ அது மட்டும் நல்லவையாகவா இருந்துவிடபோகிறது
   
101 RT @cbdaas: அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை!!"
   
தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலியும்,தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மனைவியும் ஆசைப்படுகிறார்கள்
   
விஜய் அரசியலுக்கு வந்தாலும் வராட்டியும் உங்களுக்கு என்ன ? யாரு 200ரூ தராங்களோ அவங்களுக்குதான ஒட்டு போடபோறீங்க ? #நாட்டு மேல ரொம்பதான் அக்கறை
   
ஒரு நடிகனின் படம் வந்தால் தனது ஆட்சிக்கே ஆபத்து வரும் என்று அஞ்சிய தினம் #ஆகஸ்ட்9 ! # ThalaivaaDay !! #VIJAY_ThalaivaaUAreGreat
   
மாதம் ஒன்று கருவுற்ற பெண்ணின் கையில் மரக்கன்றுகளைக் கொடுத்து மாதமொன்றாக நடச்சொல்லுங்கள் பத்து மாதங்களில் பதினொரு குழந்தைகள் பிரசவிக்கட்டும்
   
யாருக்கேனும் பாரமாய் இருக்கிறேன் என தோன்றும் நொடியில் சட்டென விலகிவிடுகிறேன்,பாரமாய் இருந்திருக்கிறேன் என்ற நினைவுதான் பெரிதும் இம்சிக்கிறது
   
மழை பெய்யவைத்து வெட்டப்பட்ட தீட்டு அகல இறுதியாக தன்னை குளிப்பாட்டிக்கொண்டாள் பிணமாக ஊர்வலம் செல்லும் பூமித்தாய் #மழையில் செல்லும் மணல் லாரி
   
என்ன தான் காம உறுப்புகள் பல இருந்தாலும் கண் பார்வை செய்யும் போதை அலாதியானது
   
வேலையில்லா பட்டதாரிகளைவிட குடும்பச் சுமையினால் பிடிக்காத வேலையிலுள்ள பட்டதாரிகள் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகம்.
   
சின்னதா காத்து அடிச்சதும் கொடில இருந்து பறந்து போவ நான் என்ன பிராவா?? ஒரு மாசமா ஊற போட்டு தொவிச்ச ஜீன்ஸ் டா :-//
   

0 comments:

Post a Comment