4-ஜூன்-2014 கீச்சுகள்




காலையில் கோபமாக பேசிய மகன் மாலை தொலைபேசியில் அழைத்து வேறு எதையோ பேசும் சாக்கில் கேட்கும் மானசீக மன்னிப்பை அப்பாக்கள் அறிந்தே இருக்கிறார்கள்
   
உன்னை கரம் பிடித்தே வாழ்வில் பாதையின் தடமறிந்தேன். என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ.. http://pbs.twimg.com/media/BpLDQmRIQAAf2iK.jpg
   
ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாராமான, தரமான குடிநீர் 1 லிட்டர் 10 காசுக்கு விற்கபடுகிறது ..! http://pbs.twimg.com/media/BpL0MXFCYAAo1qJ.jpg
   
எனது 91வது பிறந்தநாளினையொட்டி பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய போது. http://pbs.twimg.com/media/BpLOdjiIgAEdbuK.jpg
   
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
   
சிறு குறும்பும் காதலிக்க உதவும்!
   
பிறரை கிண்டல் செய்வதற்கு அறிவாளித்தனம் தேவை இல்லை. மூளை வேலை செய்யாமல் இருந்தால் போதும்.
   
தட்டுல வைக்கிறது பத்தாவது தோசையா இருந்தாலும் சாப்பிடுறது மகனா இருந்தா அம்மாவுக்கு அது ரெண்டாவது தோசைதான். :) #அம்மாடா
   
குறுஞ்செய்தி/இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்கும் தொழில்நுட்பத்தை பார்வையிடும்போது. http://pbs.twimg.com/media/BpGnLWMIUAA2DtC.jpg
   
"அவரைத் தான் திருமணம் செய்வேன்" என்று பிடிவாதமாய் வீட்டில் சண்டையிடும் பெண்ணால் காதலிக்கப்பட்டவனே அதிஷ்டசாலி..
   
கல்லூரிக் கட்டிடத்தில் வைக்கப்பட்ட கலைஞரின் பெயரை புதிய அரசு நீக்கி இருந்த நேரம்."சரிதான்,நல்ல பெயரை எடு என்பதால் எடுத்துவிட்டார்கள்-கலைஞர்.
   
இனி மின்வெட்டே இருக்காதுன்னு சொன்ன பிறகுதான் மின்வெட்டு அதிகமாயிருக்கு! சொல்வீர்களா இனி அப்புடி சொல்வீர்களா??
   
ஒரு கட்டத்துக்கு மேல காதல் இருக்கோ இல்லையோ நம்ம கூடல்லாம் இருந்து குடித்தனம் பண்ணுதேங்கற பாசம் வந்துடும் போல..
   
உதவி தேவை மிக அவசரம் ரத்தம் :- A1+ இடம் :- ஜிப்மர் மருத்துவமனை -பாண்டிச்சேரி தொடர்புக்கு :- 9942296104
   
கூந்தலை இடுப்புக்கு கீழ் வளர்த்து பிருஷ்டத்தில் துள்ளி குதிக்கவிட்டு செல்லும் பெண்களுக்கு முகமே தேவையில்லை, தேவதையென்பேன்...!
   
மாதத்தின் முதல் பத்து நாள் முதலாளியாகவும்,அடுத்த பத்து நாள் கடனாளியாகவும்,கடைசி பத்து நாள் பிச்சகாரனாகவும் மாற்றிவிடுகிறது வாழ்க்கை.
   
பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))
   
எல்லா பெண்களையும் மொக்கைஃபிகர்ன்னு கேலி பண்றவங்களுக்கு என்ன டேஸ்ட்ன்னு தெரிஞ்சிக்க அவிங்களுக்கு கல்யாணம் ஆகுற வரை காத்திருக்க வேண்டியிருக்கு
   
ஒருமுறை கண்ணதாசன் 'கோல்கொண்டா ஒயின்' கேட்டாராம்.அதற்கு கலைஞர் "ஆமாய்யா, மொதல்ல கோல்கொண்டாம்ப. அப்புறம் ஆள் கொண்டானு கேட்ப." #கலைஞர்.
   
'ரகசியம்' என்பதாக சொல்லப்பட்டவை தான் மூளைக்குள் பேரிரைச்சல் போடுகின்றன
   

0 comments:

Post a Comment