9-ஏப்ரல்-2014 கீச்சுகள்




பறவைகளுக்கு சமைத்த உணவையோ, ரொட்டியையோ போடுவதற்குப் பதில் தானியங்களையோ பழக்களையோ போட்டால் மறைமுகமாக மரம் நட்டவர்களாவோம்!
   
ஆறே வாரங்களில் மட்டும் சிவப்பழகு கிடைத்திருந்தால், ஃபேர்&லவ்லி கம்பெனியை ஆறே வாரங்களில் இழுத்து மூடியிருப்பார்கள்
   
ஹோட்டலில் மெனு கார்டை வலமிருந்து இடமாக படிப்பவன் மிடில் க்ளாஸ்!
   
செத்த பாம்பை அடிக்கத் தேவையில்லை, கொத்த வரும் பாம்பைத் தான் அடிக்க வேண்டும். அதனால் தான் காங்கிரஸை விடுத்து மோடியை அடிக்கிறோம்.
   
ஒரு பெண் உன்னை காதலிக்கிறாள் என்பதற்காக உன் கிறுக்குத்தனங்களை மாற்றிக்கொள்ளாதே. அவள் காதலிப்பதே உன் கிறுக்குத்தனத்திற்காக கூட இருக்கலாம்!
   
"உங்க பொண்ணுக்கு நீங்க போடறப்போறீங்க,அதுல நாங்க என்ன கேட்டுக்கிட்டு" என்பது டீசன்ட் வர்ஷன் ஆப் வரதட்சனை
   
நாங்க கூட்டமா போய் நோன்பு கஞ்சி குடிப்போம், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வோம் ஆனா கடவுள் இல்லைனு சொல்வோம்...நம்பிடாதீங்க # பகுத்தறிவு பாறைகள்
   
ஃபிர்ட்ஜூக்குள்ள லைட்டு வெக்கணும்ன்னு கண்டுபிடிச்சவன் நைட்டுல நொறுக்குத்தீனி திங்கிறவனாத்தான் இருப்பான்.! # மீள்ட்வீட்.
   
ஜீன்ஸ் வகைத் துணிகளை ரெகுலராய் துவைக்காத காரணத்தால் தான் தண்ணீருக்கான மூன்றாம் உலகப் போர் தள்ளிப் போடப்பட்டுள்ளது.!!
   
"நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" #Thala இந்த படத்த பார்க்கும் போது ஞாபகம் வர வரிகள் :-) http://t.co/bH1W00VUWa
   
வெளிப்படையானப் பேச்சுப் பலப் பிரச்சினைகளுக்குக் காரணம். வெளிப்படையானப் பேச்சுப் பலத் தீர்வுகளுக்கும் காரணம்.
   
ஒழுங்கா ஒரு ஃபார்ம் ஃபில்லப் பண்ணத் தெரியல இந்த லட்சணத்துல இந்தியாவ வல்லரசு ஆக்கப் போறாங்களாம்- வேட்புமனு தள்ளுபடி
   
நம் தொப்பையை பார்த்து சந்தோஷபடுபவள் அம்மா,வருத்தபடுபவள் பொண்டாட்டி.;-)
   
"அடுத்தவனுக்கு கிடைத்தது என்று சக மனிதன் பொறாமை படாத ஒரே விஷயம் மரணம் மட்டுமே"
   
படம் முடியறதுக்கு 3 நிமிசம் முன்னால பாட்ட வைக்கிறதையும், படம் வந்த 3வது நாளே சக்சஸ் மீட்ட வைக்கிறதையும் மொதல நிறுத்துங்கய்யா
   
பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன் எப்படியாவது வெள்ளையாகிடனும்னு நினைத்த தலைமுறை இப்ப எப்படியாவது ஒல்லியாகிடனும்னு ஆசைப்படுது.
   
அம்மா ஆட்சியில் கடைக்கு போக காசு தேவையில்லை-பாத்திமா பாபு#இதை கடைக்காரன்ட்ட சொன்னதுக்கு,அந்த மூதேவிய வரச்சொல்லுனு சொல்றான் மேடம்
   
முதல் முறை கேட்கப்படும் போது தான் உதவி....மீண்டும் மீண்டும் கேட்கப்படும் போது தொல்லை:)
   
காலைல ஆம் ஆத்மி கட்சிக்காரங்க ஒட்டு கேட்டு வந்தாங்க. வெளக்குமாறு விக்க வந்தவங்கன்னு நெனச்சு என் அம்மா போயிட்டு அடுத்த மாசம் வர சொல்லிட்டாங்க
   
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தே தீரும்: கருணாநிதி # நியாயம்டா நேர்மைடா..குல்லாவ சரியா மாட்றா http://t.co/2mr92VGJIp
   

0 comments:

Post a Comment