1-ஜூலை-2015 கீச்சுகள்




பேரை அம்மா ரயில்னு மாத்தாம மெட்ரோ ரயில்னே வச்சுருக்கோம்.அதுக்கு சந்தோஷப்படுங்கடா அப்புரசண்டிகளா..
   
ஆயிர ஓவால ஹெல்மெட் வாங்கறதவிட இருவது ஓவால அம்மா ஸ்டிக்கர் ரெண்டு வாங்கி வண்டில ஒட்டுறது சேஃப். என்ன நாஞ்சொல்றது..
   
தனக்கு மதுவையும் வயலுக்கு ரசாயனத்தையும் பழக்கப் படுத்திவிட்டு குழந்தை இல்லா ஏக்கத்தில் மனைவியிடம் புலம்பினான் 'போட்ட விதை முளைக்கல "
   
பெரும்பாலும் அப்பா நமக்காக வாங்கிவரும் ஒவ்வொரு பொருளும், அவர் காலத்தில் அவருக்கு அது கிடைக்கப் பெறாதவையாகவே இருந்திருக்கும்.!!
   
மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார்.இனி சிவபாலன் (எ)அப்புக்குட்டி.என அழைக்க படுவதை விரும்புகிறேன்.#Appukutty http://pbs.twimg.com/media/CIv4WUAUkAA-2gp.jpg
   
நெருக்கமானவரிடம் நாம் நம்பிச்சொன்ன வார்த்தைகள் வேறொருத்தர் வாயால் கேட்கையில் அவமானப்படுகிறது நம் நம்பிக்கை..!
   
hi friend's இந்த மக்கள் திலகத்திற்கு ஒப்பான ஒர்மாமனிதர் பாலக்காடுமாதவன் படம் வெற்றிபெற செய்யுங்கள். மரங்களின் காவலளன் http://pbs.twimg.com/media/CIwUkCHUAAEJmBE.jpg
   
இப்படி ஒரு பெண்ணை மணப்பவனே உண்மையில் பாக்கியசாலி.... http://pbs.twimg.com/media/CIwSkdTVAAAKzMh.jpg
   
மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. கட்டாயம் வாழ்த்த வேண்டும். பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
   
சாதி கேட்டு வீடு கொடுப்பதாக ஒரு நண்பர் வருத்தப்பட்டார் எனக்கு இஞ்சினீரிங்க் கவுன்சிலிங்கில் அரசாங்கம் சாதி கேட்டு தான் சீட்டே கொடுத்தது :-)
   
ஒரு போராளியின் துயர சரித்திரம் http://pbs.twimg.com/media/CIvbeW8VEAAjoY_.jpg
   
ஒற்றை இரவில் ஒட்டுமொத்த மூளையை பார்மேட் பண்ணி விடு இறைவா இந்த மனிதகுலம் திருந்தும்.......!!!
   
நம்மிடம் பேச விருப்பம் இல்லாதவர்களிடம்,,, நாமும் பேச கூடாது,,, #அனுபவம்
   
மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும்- செய்தி# 1940-ல் மெட்ரோ ரெயில் இருந்திருந்தால் கருணாநிதியை நாம் இழந்திருப்போம்.
   
எல்லா சாதியும் ஆங்கிலேயர்களுக்கு அடிமையா இருந்த சாதி தான். டீ முடிஞ்சுபோச்சு எந்திரிச்சு போ நாயே.
   
உலக அளவில் தமிழனின் அடையாளம் இளையராஜா .. தமிழனின் உலகளாவிய அடையாளம் ரஹ்மான்
   
இதிகாசங்களின் படி,எவனொருவன் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நாளை தொடங்குகிறானோ,அவன் நாள் முழுவதும் கொட்டாவி விட்டுக்கொண்டேஇருப்பான் என்பது ஐதீகம்.
   
காதலில் தோற்றதால் குடிக்கிறார்களாம்.? அதற்க்கு பாய்டாயில குடி, இல்லை மாட்டு கோமியத்தை குடி. மூதேவிகளுக்கு குடிக்க ஒரு காரணம் தேவை அவ்வோதான்
   
பேச பிடிக்காத தருணங்களில் மவுனம் நல்ல பேச்சுத் துணையாய் இருக்கிறது !
   
நீ எனக்குப் போட்ட நாமத்தை ஒருவன் உனக்குப் போடுவான்; அவனுக்கு இன்னொருவன் போடுவான்! இதுவே உலகநியதியும் படைப்பின் சாராம்சமும் ஆகும் ;-)))
   

0 comments:

Post a Comment