29-மே-2015 கீச்சுகள்




கரும்பு நட்டேன் விற்கவில்லை, கம்பு நட்டேன் விற்கவில்லை, நெல் நட்டேன் விற்கவில்லை. கடைசியில் கல் நட்டேன் விற்றுவிட்டது -விவசாயி👳
   
காய்விடுவதையும்,பழம்விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்! நாம்தான் மனங்களில் வைத்திருக்கிறோம்.
   
இப்பொழுதும் நம்மிடையே காமராசர்கள் இருக்கிறார்கள்!ஆனால் நாம் தான் அவர்களை ஒரு கவுன்சிலராகக் கூட ஆக்குவதில்லை!
   
ரூபாய் நோட்டிலிருந்து தூக்கிவிட்டால், காந்தியின் முகம் சீக்கிரம் மறந்துபோகும்!
   
எவ்வித கூச்சமுமின்றி உரிமையாய் அப்பாவிடம் காசு கேட்டதைப்போல, அப்பா என்னிடம் கூச்சமின்றி கேட்கும்படி ஒருவாழ்க்கை வாழ்ந்தால் போதும்! #Insfrd
   
ஆண்களின் அழகு முப்பது வயதில் தொடங்குகிறது பெண்களின் அழகு முப்பது வயதில் முடிகிறது.
   
எனது மகன் ஆதவ் பிறந்த நாளான இன்று, உங்களின் வாழ்த்துக்களை எதிர்நோக்கி! http://pbs.twimg.com/media/CGDgto5UEAE9ZOK.jpg
   
கடற்கரை கைப்பந்தாட்ட உலகப் போட்டியில் நாகை மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்வீரர் மதிவாணன். வாழ்த்துவோமே ! http://pbs.twimg.com/media/CGC6_O8W0AA0MA7.png
   
"உங்க டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா.. "பாத்ரூம்குள்ள கேமராவோட" படார்"னு கதவ தொறந்துட்டு வர்றியே உனக்கு துப்பிருக்கா.நல்லவேள துண்டு கட்டி இருந்தேன்
   
ஒருவர், பிறரைப் பற்றி பேசுவதை கவனமாக கேளுங்கள்; அப்படிதான் அவர் உங்களைப் பற்றி பிறரிடம் பேசக் கூடும்!
   
ட்விட்டர உட்டுப் போலாம்னு இருக்கேன்! இந்த ட்வீட் 100RT வந்தால் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்யப்படும் எனக் கூறிக்கொண்டு! -பச்சப்புள்ள
   
நீதிபதி : உண்ணோட கடைசி ஆசை என்ன?? 😕 கைதி : வாலு படம் ரிலீஸ் ஆனதும் என்ன தூக்குல போடனும் 😎 நீதிபதி : ?? 😮 😳 😁 😷
   
மத்த ஊர்ல எப்டினு தெரியாது எங்க ஊர்ல சூர்யா படத்துக்கு டிக்கெட் புக் பண்ணி போனும்னு சொன்னா Spot'லயே சிரிச்சு உருண்டுருவாய்ங்க 😂 😂 #Madurai
   
மனைவி மக்களை உண்மையாய் நேசிக்கும் எந்த ஆணும், முதலில் பேணவேண்டியது தன் உடல்நலத்தையே!
   
என்னது சல்மான் கான் கேஸ் பைல் எரிஞ்சிடுச்சா, எங்க ஜாதி வழக்கப்படி புதைக்கறது தான்யா முறை 😂😂😂😂
   
ஒருவரின் வளர்ச்சியை கண்டு நீங்கள் பொறாமைக் கொண்டு வருந்துகிறீர்கள் எனில் அவர் வளர்கிறார் என்று பொருளல்ல நீங்கள் வீழ்கிறீர்கள் என்றே அர்த்தம்
   
பார்க்கில் ஒரு தாத்தா தினமும் வந்தமர்ந்து தனியாய் பேசிக் கொண்டிருக்கிறார்..கடைசியில் வாழ்க்கை அவ்வளவு தானா எனத் தோன்றுகிறது..
   
முதல் ஹிட் கொடுத்த முருகதாஸ்யும் திட்றானுக, கடைசி ஹிட் கொடுத்த வெங்கட்பிரபுவையும் திட்றானுக. இவனுக என்ன ரகம்னே தெரியல http://pbs.twimg.com/media/CGG1Q63UIAEvjj1.jpg
   
'2ஜி'ன்றதுனால தான் அந்த வழக்கு ஸ்லோவா நடக்குது போல.. '3ஜி'னா சீக்கரமே முடிஞ்சிரும்..
   
ஆட்சியை பிடிக்கும் முறையை மிகவும் ரகசியமாக வைத்துள்ளோம்- சீமான் # யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க, அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க.
   

0 comments:

Post a Comment