12-மே-2015 கீச்சுகள்




ஆடு திருடுபோகல, ஆடு திருடுபோன மாதிரி கனவு கண்டேன் என்கிறார் நீதிபதி குமாரசாமி http://pbs.twimg.com/media/CEs-LygUsAALckC.jpg
   
குன்கா 1100 பக்கம் நாக்கு தள்ள தள்ள தீர்ப்பு சொன்னாரு! ஆனா குமாரசாமி "ஒரு ஊத்தாப்பம் பார்சல்"ன்னுட்டு போயிட்டாரு! 😕😕😕
   
சல்மான் ரிலிஸ் ஆகிட்டாரு அம்மா ரிலிஸ் ஆகிட்டாங்க ஆனா உங்க வாலு மட்டும்... http://pbs.twimg.com/media/CEtCwDwVEAAEn1Q.jpg
   
4 மாசமா நடந்த 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல நம்ம அமைச்சர்கள் யாருமே சிரிக்காம 1000பாயிண்ட்ஸ் அப்படியே வச்சுருக்காங்க http://pbs.twimg.com/media/CEtErc9VIAAhi_3.jpg
   
கூட்டத்துல ஒருத்தன் குன்ஹாவாவது கொஞ்சம் கோவக்காரரு ஆனா குமாரசாமி கடுங்கோவக்காரருன்னு சொன்னான் அவனைத்தான் தேடிட்டு இருக்கேன் 😂😂😂😂
   
எதாவது பண்ணி காசை சேர்த்துருங்கடா நீதி நேர்மை வாழ்ந்து நாசமா போகதிங்க! நீங்க இந்தியாவுக்கு அன்பிட் ;-/
   
தமிழகமே "அம்மா டா" எனக் கூறும் இவ்வேளையில் ஓ.பி.எஸ் மட்டும் சொல்வார் "அப்பாடா"
   
அரசியல்வாதிகளே இனி எந்த தயக்கமும், பயமும் வேண்டாம், தைரியமாய் கொள்ளை அடியுங்கள்... #வாழ்க இந்தியா...
   
இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.
   
இனி, ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் போர்டில் எழுதிவைத்துள்ளள சத்தமாபேசியவர்களின் பெயர்களை அம்மாவுக்கு படித்துக்காட்டுவார்.
   
குன்ஹா படிச்சப்ப வேற syllabus.... குமாரசாமி படிச்சப்ப வேற syllabus ஆம் #சட்டம்.
   
சத்தியமா சொல்றேன் இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் இந்த நாடு வெளங்கவே வெளங்காது....
   
இதே நாள் நம்ம நாட்ல எங்கோ ஒரு ஏழை விவசாயி பேங்க்ல வாங்குன 5000ரூ கடனுக்காக நிலத்தை ஜப்தி பண்ண சொல்லிருக்கும் ஏதோ ஒரு கோர்ட்டு :-/
   
கொலைசெய்த சல்மான்கான் ஜாமீனில் ரிலீஸ் , 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஜெ விடுதலை.இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதை நிரூபித்துவிட்டது
   
ஆங்காங்கே கோவில் வாசல்களில் அமர்ந்திருக்கும் மந்திரிகள் தத்தம் அவர்கள் பணிக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்கிறோம்!
   
இவ்வளவு தெளிவான ஆவணச்சான்றுகள் இருந்த வழக்கே இப்படி முடியுமெனில், இனி ஊழலும் அராஜகமும் தலைவிரித்தாடும்! இது நம் அடுத்ததலைமுறைக்கு நல்லதல்ல!
   
தீர்ப்பை விமர்சிப்பது குற்றம். திருடிச் சொத்து சேர்ப்பதே தர்மம். ஆமென்.
   
ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காத ஒரு பெண்மனியை 18வருடங்களாக அலையை வைத்த நீதிபதிகளுக்கு 7ஆண்டுகள் தண்டனை அளிக்க வேண்டும்
   
இங்கெல்லாம் கண்டதையும் விக்கக்கூடாது என்ற நீதிபதியிடம் 'ஓ.. நீதியை மட்டும் தான் விக்கனுமா?' என்றான் கோர்ட் வாசலில் இருந்த வியாபாரி!
   
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். மீண்டும் தர்மம் விலைக்கு வாங்கப்படும்.
   

0 comments:

Post a Comment