5-ஜூலை-2014 கீச்சுகள்




50 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்டா இனிமே இங்க் ஃபில்லர்லதான் ஊத்துவாங்க போல.
   
முதலில் ஒரு பெண்ணின் திமிரை பார்த்து அவளுடன் பழகும் ஆண்.இறுதியில் அவளை விட்டுப் பிரிந்ததற்குக் காரணமும் அவளுடைய திமிராய்த் தான் இருக்கும் !!
   
18 வழிகளில் உதவியாக இருந்தால் அது டேபில்மேட்; 18 வழிகளில் தொந்தரவாக இருந்தால் அது ரூம்மேட்....
   
காதலனுடன் இருந்தேன் தாவணியை சரிசெய்தேன், நண்பனுடன் இருந்தேன் தாவணியை சரிசெய்தான் மிகபிடித்த கவிதைதொகுப்பு #நட்புக்காலம்# அறிவுமதி
   
போரூர் சம்பவம் நடந்து மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் வருவதற்கு முன்பே, முதல் ஒரு மணி நேரத்திலேயே (cont) http://tl.gd/n_1s2b4le
   
சில பெண்கள் அழகான ஆடை அணிகிறார்கள். சில பெண்கள் ஆடைக்கு அழகை அணிவிக்கிறார்கள்.
   
மரியா ஷரபோவா மட்டும் மதர் தெரசாவ தெரியாதுன்னு சொல்லியிருந்தா, இவங்கல்லாம் எனக்கென்ன வந்துச்சின்னு வேலைய பாக்க போயிருப்பாங்க:-)))
   
எதைத் தேட வேண்டுமென்றாலும் குழந்தைகள் அம்மாவைத் தேடுகிறார்கள்..!!
   
சுகாதாரம்,ஆரம்ப நிலையிலேயே இருக்கும் இடத்துக்கு,'ஆரம்ப சுகாதார நிலையம்' என்று பெயர்!
   
ஆண்களும் பாய் பிரண்ட்ஸ் தேடும் காலமிது - பிரியாணி சாப்பிட ரம்ஜான் நெருங்குகிறதே
   
ஷுப்ரமணி என்றான். அது சுப்ரமணி என்றேன். எனக்கு ஷாவே வராது என்றான். கத்தியால் குத்தினேன். ஷெத்துவிட்டான். பொய் ஷொல்லிவிட்டான் போல.
   
போரூர் இடிபாடுகளில் ஒரு பணக்காராரோ VIPயோ சிக்கியிருந்தால் அட்லீஸ்ட் போடப்படும் கேஸ் சாகாமல் இருக்கும். இறந்தவர்கள் எல்லாரும் ஏழைக் கூலிகள்!
   
வழக்கம்போல சாப்பாடு சூப்பர்னு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேன்.இப்பத்தான் ஞாபகம் வருது,வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வரலன்னு://
   
''புகை பிடிப்பது யாராக இருந்தாலும் அவர் அருகில் இருப்பது நாமாக இருக்க கூடாது'' #புகைப்பவரை விட அருகில் இருப்பவருக்கு தான் ஆபத்து அதிகமாம்
   
குழந்தைகள் சில விஷயங்களை டீச்சர்கள் சொன்னால் மட்டுமே கேட்கிறார்கள்...முதியவர்கள் சில விஷயங்களை டாக்டர்கள் சொன்னால் மட்டுமே கேட்கிறார்கள்
   
பேக்கரியிலோ ஓட்டல்லையோ சர்வர் என்ன சாப்புடுறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியல! இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா...
   
வண்டி ஓட்டும்போது புகைபிடிக்க நினைக்கிறவங்க, சைலண்சர் ல ஒரு ட்யூப மாட்டி வாய்ல உறிஞ்சிக்கோங்க.. ஊராவது சுத்தமாகும்!
   
தன் சாவுக்கு தானே ஆடிக் கொண்டிருக்கிறது சற்றுமுன் உதிர்ந்த இலை.
   
எப்போதும் சிரித்தமுகமாக இருப்பவர்கள்தான் எளிதில் கலங்கிவிடுகிறார்கள்!
   
இன்னிக்கு சச்சினை தெரியாது சொன்ன ஷரபோவா..நாளைக்கு கட்டதொரயவே தெரியாதுன்னு சொன்னாலும் சொல்லும்..இதை சும்மா விடகூடாதுய்யா..
   

0 comments:

Post a Comment