20-ஜூலை-2014 கீச்சுகள்




திருச்செந்தூர்: நெய்தல் பனை மரங்கள், என் முருகனை விட அழகு:) http://pbs.twimg.com/media/Bs4PrSTCAAEko9p.jpg
   
வாய்ப்புக்கும் விருதுக்கும் எவன் வாசலுக்கும் போய் நின்னது கிடையாது, எவனுக்கும் வாசிச்சதும் கிடையாது # தலடா
   
ட்விட்டரில் உறுப்படியான வேலையா இதில் விவாதம் கிளப்பி அரசின் கவனத்துக்கு கொண்டு போலாமே செய்வோமா நாம் செய்வோமா.! http://pbs.twimg.com/media/Bs4JKElCQAIjUW7.jpg
   
அஜித்துக்கு எல்லாம் அவார்ட்டு கொடுக்க முடியாது, அந்த அவார்டுக்கு கொடுத்து வச்சிருந்தா அது அஜித் கைக்கு போகும் # தலடா
   
பையனா? புள்ளையா? எனக் கேட்டறிந்த பிரசவத்தை நார்மலா?சிசேரியனா? என மாறிக் கேட்க வைத்தது நவீன மருத்துவம்.
   
20 வயசு வரைக்கும் வேளைக்கு சோறு.. அதுக்கு மேல... "வேலை"க்கு தான் சோறு... #இவ்வளவுதான் வாழ்க்கை..
   
நான்லாம் மொத மொத டிவிட்டர் வரும்போது நரம்புகள் புடைக்க நாட்டுக்கு ஏதாவதுகருத்துக்கள் சொல்லலாம்னு வந்தேன், அப்டி ஓரமா போயி உக்காருன்னுட்டாங்க
   
யாரு பேர சொன்னா, அடிக்கிற விசிலு சத்தம் வானத்துல பறக்கிற விமானத்துல இருக்கிறவங்களுக்கும் கேட்குதோ அதான் தல.!
   
மரங்கள் "WIFI" சிக்னல் தருமானால் மரங்களாக நட்டு இருப்போம் பூமித் தாயும் பிழைத்திருப்பாள் பாவம் நாம் சுவாசிக்க "ஆக்சிஜன்" மட்டுமே தர முடியும்
   
மனைவியின் அழுகையை கூட சகித்து கொள்ள முடிகிறது...!! இத்தனை வயதாகியும் அம்மா அழுவது மட்டும்..பெரிய காயத்தை உருவாக்கி விடுகிறது..!!
   
நடிகர்கள் படம் ரிலிஸ் டைம்ல டுவிட்டர்ல நாம போடுற மென்சன்லாம் RT பண்ணுனான படம் ஜெயிச்சுரும்னு நினைக்குரது தான் தமிழ் சினிமாவோட தோல்வி :/
   
ரஹ்மான் மட்டும் தான் காசுக்காக வேலை செய்கிறார். ராஜாவும் ராஜா ரசிகர்களும் அலுவலகம் செல்வதே உலக அமைதிக்கு நிதி திரட்ட மட்டும் தான்
   
சிகரெட் பிடிக்காதிங்க பாக்கு போடதிங்க வண்டிய மெதுவாவே ஓட்டுங்க முடிய வேற மாதிரி சீவுங்க சில மாதங்களுக்கு பிறகு நீங்க முன்ன மாதிரி இல்ல
   
8 ல் பாதி 4 என்பது கணிதம்..! 8 ல் பாதி 3 அல்லது 0 என்பதே உண்மை! #குறுக்கவெட்டுனா 0 நேரா வெட்டினா 3 !
   
கடவுள் ஏன் கல் ஆனார்னு கேட்டா ஆத்திகன் . . கல் ஏன் கடவுள் ஆச்சுனு கேட்டா நாத்திகன் . . தட்ஸ் ஆல் ...
   
நம் நாட்டில் MP, MLAக்கு கொடுக்க வேண்டிய அத்தனை சலுகைகளையும் விவசாய பெருமக்களுக்கு கொடுத்தால் நாடு வளம் பெரும்.
   
தண்டவாளங்கள் ஒருபோதும் சேறுவதில்லைன்னு சொல்கிறார்கள்?! ஏன் அவர்கள் எப்போதும் அவை பிரிவதேயில்லை என்பதை உணர்வதில்லை
   
"டேய்.." "ஏம்ப்பா.. வயசுக்குன்னு ஒரு மரியாதை இல்லியா" "ஏண்டா..நாய்க்கு வயசானா அண்ணேன்னா கூப்பிட முடியும்" #கவுண்டர் கடப்பாரைகள்.
   
உலகிலயே அதிக சிற்பங்கள் உள்ள கோவில் எது என தெரியுமா ? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான் 33,000 சுதைகள் உள்ளன. பெருமையோடு ஷேர் பண்ணுங்க !
   
"நான் இருப்பேன் உன்னுடன் எப்போதும் " சொன்ன மனிதர்களின் தடம்கூட மீந்திருக்காது தேடும்போது
   

0 comments:

Post a Comment