3-பிப்ரவரி-2014 கீச்சுகள்




அம்மாவின் பாசம் அவள் அம்மாவானதிலிருந்தே புரிகிறது, அப்பாவின் பாசம் நாம் அப்பாவாகும் போதுதான் புரிகிறது.!
   

இன்னைக்கு நாகேஷ் நினைவு நாளாம்-நாகேஷ் மாதிரி எவனும் செத்தாலும் நடிக்க முடியாது,செத்த மாதிரியும் நடிக்க முடியாது#மகளிர் மட்டும்.
   
25 வது நாள் # வீரம் - கோவை -7,ஈரோடு-1 .திருப்பூர்-8, ஜில்லா - கோவை -3,ஈரோடு -1,திருப்பூர் -3# கொங்கு 16:7
   
கேப்டன் பேச்செல்லாம் 3டி படம் மாதிரி..சும்மா பாத்தா ஒளர்ர மாதிரி தான் தெரியும்..ஒரு குவாட்டர் அடிச்சுட்டு பாத்தா தெளிவா தெரியும்..
   
கேப்டன் மைன்ட் வாய்ஸ் : இம்புட்டு பேரு வந்திருக்கீங்களே, இதுல பாதி பேரு என் படத்த பார்த்திருந்தா நான் ஏன்யா அரசியலுக்கு வாரேன்
   
தம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டவர்கள் ஓரிடத்தில் நிற்க, தாம் முட்டாள்கள் என்று கூறிக் கொண்டு சிலர் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்...
   
கோபத்தை குழந்தையிடம் காட்டும்போது மட்டுமே அது எவ்வளவு கேவலமானது என்று தெரிகிறது .
   
நான் இனிமேல் போலீஸாக நடிக்கமாட்டேன் - கேப்டன் # இதை வரவேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர் :-)
   
வயதான காலத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களின் மனஓட்டத்தை விடவா நம்பிக்கை துரோகத்தால் அதிகவலியை தந்துவிட முடியும்?!
   
இந்த உலகில் உணவுத் தட்டுப்பாடு கிடையாது, உணவுப் பகிர்வு தான் இல்லை #ஆறாம் திணை
   

0 comments:

Post a Comment